Showing posts with label CPS. Show all posts
Showing posts with label CPS. Show all posts

Sunday, 22 September 2013

புதிய பென்சன் மசோதா சந்தை திவாலானால் அனைத்தும் பறிபோகும் : மக்களவையில் சிபிஎம் தலைவர் எச்சரிக்கை

ஒருவர் ஓய்வுபெறும்போது, தான் இவ் வளவுதான் ஓய்வூதியம் பெறப்போகிறோம் என்று சொல்லமுடியாத அளவில் உள்ள ஓர் ஓய்வூதியத் திட்டம் நாட்டிற்கு தேவையா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் புதனன்று ஓய்வூதிய சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பாசுதேவ் ஆச்சார்யா பேசியதாவது:

ஓய்வூதிய நிதியம் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சி உறுதியாக எதிர்க்கிறது. 2004 ஜனவரி 1 முதல் இதனை ஐ.மு.கூட்டணி அரசு அமல் படுத்தி வருகிறது. அதனைச் சட்டரீதியாக மாற்று வதற்காக இச்சட்டமுன்வடிவினை இப்போது கொண்டு வந்திருக்கிறது. இதற்காக ஓர் ஆணை யம் உருவாக்கப் பட்டிருக்கிறது. தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ள பிரதமர், மேலும் சில கடினமான சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருக்கிறார். அதில் ஒன்றுதான் இந்த புதிய ஓய்வூதிய முறை யாகும்.

நம்முடைய அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் அமெரிக்க அரசாங்கத்தின் கட்ட ளைப்படிதான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓய்வூதிய நிதியச் சட்டமுன்வடிவும் அதன் கட் டளைப்படிதான் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இவ்வாறு இதனை மாற்றவேண்டும் என்று அமெரிக்காவும், உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஏன் துடிக்கின்றன? பழைய ஓய்வூதிய அமைப்பு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. ஓய்வூதியம் என்பது ஒன்றும் கருணைத் தொகை அல்ல. நாம் சுதந்திரம் பெற்றபின் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு ஊதியக்குழுக்களைப் பார்த்து விட்டோம். இந்த ஆறு ஊதியக்குழுக்களுமே ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் மற்றும் தொழி லாளர்களின் பிரிக்கமுடியாத உரிமை என்று ஒரே சீராகப் பரிந்துரைத்திருக்கின்றன.

எனவே. இது அவர்களுக்கு அளிக்கப்படும் கருணை அல்ல. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஊழியர்களுக்கு உறுதியானமுறையில், பயன் பாடுகள் அளிக்கப்படவில்லை. ஊழியர்களின் சேமிப்பு பங்குச் சந்தையில் போடப்படவிருக் கின்றன. அது என்னாகும்? இது தொடர்பாக எந்த உறுதிமொழியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வில்லை. புதிய ஓய்வூதியச் சட்டத்தில் பாஜக திருப்தி கொண்டிருப்பது எப்படி? என்று எனக்குத் தெரியவில்லை. தொழிலாளர்களின் தொகை பங்குச்சந்தை யில் போடப்பட்டு, அதில் ஒரு பெரிய வீழ்ச்சி ஏற் பட்டால், ஊழியர்களுக்கு எந்தத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்படி உள்ள ஒரு சட்ட முன்வடிவை எப்படி பாஜகவினர் ஆதரிக் கிறார்கள்? மேலும் பொருளாதாரத்தில் பண வீக்கத்தின் அழுத்தத்திற்கு ஏற்ப ஊழியர்கள் பெறும் உண்மை ஓய்வூதியத்தின் மதிப்பும் குறையும். பல நிறுவனங்கள் ஆசைகாட்டி ஊழியர்களை மோசம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

குறிப்பாக நான்காம் நிலை ஊழியர்கள் ஏமாற்றப்படுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி 10 விழுக் காடு ஊதியம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இவ்வாறு 2004 ஜனவரி 1லிருந்தே பிடித்தம் தொடங்கிவிட்டது. இதே அளவு தொகையை அரசும் செலுத்த வேண்டும். இவ்விரண்டு தொகையை வைத்து ஒரு நிதியம் உருவாக்கப்படுகிறது. இதனை நிதிய மேலாளர் எனப்படும் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறார்கள். ஒரேயொரு மேலாளரைத் தவிர மற்ற அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகும். மாபெரும் தொகை இவர்களிடம் தூக்கிக் கொடுக்கப்பட இருக்கிறது.

இதன் பொருள், அரசாங்கத்தின் பணம், தனியார் நலன்களுக்காகப் பயன்படுத்தப் பட விருக்கிறது என்பதே. புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப் படுவதன் மூலம் இருவித ஊழியர்களும் உரு வாக்கப்பட விருக்கிறார்கள். ஒரு பகுதியினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உத்தர வாதமான வருமானத்தைப் பெறுவார்கள். புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தில் மாதந்தோறும் பத்து விழுக்காடு சம்பளத்தைத் தரும் ஊழியர்கள். ஆனால், இவர்கள் ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார்கள் என்று அரசாங்கத்தால் இவர்களுக்குச் சொல்ல முடியாது.

ஐ.மு.கூட்டணி 1 அரசாங்கக் காலத்தில் இக்கேள்வி யைப் பலமுறை நான் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டேன். அவர்களின் தொகை சந்தை நிலவரத்தைச் சார்ந்திருக்கும் என்பதால் ஓய்வூதியம் எவ்வளவு பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை என்று பதிலளித்தார். சந்தை திவாலாகிப்போனால், ஊழியர்கள் அனைத்தையும் இழந்து விடுவார்கள். இவ்வளவு மோசமான சட்டத்தை நாம் ஏன் கொண்டுவர வேண்டும்? நாட்டில் ஒரு கோடிக் கும் மேல் ஊழியர்கள் மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும், வங்கி மற்றும் இதர நிறுவனங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இவர்களின் எதிர்கால வாழ்வை ஏன் கேள்விக்குறியாக்குகிறீர்கள்? இது அரசிய லமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவிற்கு எதிரான தாகும்.

யாருடைய கட்டளைப்படி, யாருடைய நோக்கம் நிறைவேறுவதற்காக இதனைக் கொண்டுவருகிறீர்கள்? இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். அந்த ஒன்று என்ன? அதுதான் மிகவும் முக்கியமான பரிந்துரையாகும். நாடாளுமன்ற நிலைக்குழு தன் அறிக்கையில், ‘‘சந்தாதாரர்கள் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவு ஓய்வூதியம் பெறுவதை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்தில் ஒரு ஏற்பாட்டை அரசு உருவாக்கிட வேண்டும். அதன் மூலம் இதர ஓய்வூதியதாரர்களுக்கு எதிராக எந்தவிதமான பாதகமும் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிலைக்குழு விரும்புகிறது’’ என்று கூறியிருந்தது. மற்ற ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய ஓய் வூதியதாரர்களுக்கும் இடையே பாகுபாடு இல் லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்று நிலைக்குழு கோரியிருந்தது. இந்த பரிந்துரை யைத்தான் அரசு கண்டுகொள்ளவில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக வர லாற்றுச் சிறப்புமிக்க இரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாட்டிலுள்ள 11 மத்திய தொழிற்சங் கங்கள் இணைந்து கடந்த பிப்ரவரி 20, 21 தேதி களில் நடைபெற்ற மேற்படி வேலைநிறுத்தத் திற்கான அறைகூவலை விடுத்தன. ஐஎன்டியுசி முதல் பிஎம்எஸ் உட்பட அனைத்துத் தொழிற் சங்கங்களும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. ‘‘அரசாங்கம் புதிய ஓய்வூதியத்திட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் இது பெரும்பகுதி ஊழியர்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறது. இது, ஓய்வூதியப்பயன்களைப் பெறுவதை ஊழியர்களிடமிருந்து பறித்துவிடு கிறது’’ என்று கூறித்தான் இவ்வேலை நிறுத்தம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டம் சட்டமானால், அடுத்த 34 ஆண்டுகளில் நாட்டிலிருந்து வெளி யேறும் பணத்தின் மதிப்பு தற்போதுள்ள 14 ஆயி ரத்து 284 கோடி ரூபாயிலிருந்து 57 ஆயிரத்து 088 கோடி ரூபாயாக அதிகரிக்கும். இது நாட்டிலுள்ள ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரா னது. எனவே அரசு, வழக்கத்திலிருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஓய்வூதிய தாரர் இறந்தால் குடும்பத்திற்கு ஓய்வூதியம் கிடை யாது. பணிக்கொடைக்கும் எந்த வாய்ப்பும் கிடையாது. எனவே இச்சட்டமுன்வடிவை நாங்கள் உறுதிபட எதிர்க்கிறோம். அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும்.

நன்றி- தீக்கதிர்

Sunday, 31 March 2013

தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக கணக்கிடப்படுமா?

தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்த காலத்தை பணிக்காலமாக கணக்கீட வேண்டும் என்று நிரந்தரம் செய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களின் கோரிக்கை ஆசிரியர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது.


பள்ளி கல்வித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி கடந்த 2003ஆம் ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர்.


இவர்களுக்கு மாதம் தோறும் மூவாயிரம் முதல் நான்காயிரத்து ஐநூறு ரூபாய் வரை தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 01.06.2006 முதல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. 


ஆனால் தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக கணக்கீடு செய்ய பல முறை கோரிக்கை வைத்தும், போராடியும் எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதேபோல் தொகுப்பூதியத்தில் 1990 முதல் 1992 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிப்பலனோடு பணப்பலனும் அளிக்கப்பட்டது.  "எங்களுக்கு பணப்பயன் தேவையில்லை குறைந்தபட்சம் பணிப்பயனை அளித்தால் போதும்" என்றும், இவ்வாறு அளிக்காமல் போனால், தேர்வு நிலை மற்றும் பணி மூப்பு பாதிக்கப்படும் எனவும் தெரிவிகின்றனர். 


மேலும் புதிய பென்சன் திட்டத்தில் இவர்களை இணைத்து மாதம் தோறும் ஒரு கணிசமான தொகையும் கடந்த பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது பென்சன் திட்டத்தில் வசூலிக்கப்படும் பணம் எந்த கணக்கில் உள்ளது என்பது இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கே தெரியாதநிலை தொடர்கிறது. 


எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். தேர்வு நிலை பெறவும், பணி மூப்பு பாதிக்காமல் இருக்கவும் தொகுப்பு ஊதியத்தில் பணி செய்த மூன்றாண்டு காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டும். 


மேலும் பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஜிபிஎப் கடன் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காலமுறை ஊதியம் பெறும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Friday, 29 March 2013

ஓய்வூதியம் - ஒரு கனவோ ? , கானல் நீரோ ? - விழிப்புணர்வு கருத்தரங்கு


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் 13.04.2013 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அமராவதி ஹாலில் (A/C) காலை 09.00 மணியளவில் "ஓய்வூதியம்  - ஒரு கனவோ ? , கானல் நீரோ ?" என்ற தலைப்பில் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) பயனற்ற பாதுக்காப்பற்ற தன்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஓய்வூதிய வரலாறு, பழைய ஓய்வூதியத்தில் உள்ள பலன்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தின் பயனற்ற தன்மை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விரிவாக விளக்கப்பட்டு அனைவருடைய ஐயங்களையும் போக்க கேள்வி - பதில் விவாதங்களும் நடைபெற்றன.

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் சம்பளம் ஓய்வூதியத்திற்காக பிடிக்கப்படுகிறது... நினைவில் கொள்வோம்!... விழிப்புணர்வு பெறுவோம்!...

Wednesday, 13 March 2013

புதிய ஓய்வூதிய திட்டத்தில் 47 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை

புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த 47 ஆசிரியர்களுக்கு இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை. 2003 ஏப்.1க்கு பிறகு பணியில் சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம், தர ஊதியம், அகவிலை படியில் 10 சதவீ தம் பங்களிப்பு தொகையாக பிடித்தம் செய்யப்படும். அத்துடன் அரசும் தங்களுடைய பங்களிப்பாக அதே தொகையை கொடுத்துவிடும்.

அரசு ஊழியர்கள், பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்களுக்கு சேம நல நிதி, பங்களிப்பு தொகை ஆகியவை பொது கணக்குத்துறை மூலம் பிடித்தம் செய்யப்பட்டு, கணக்கு பராமரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் சேமநலநிதி, பங்களிப்பு தொகை ஆகியவை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூலம் பிடிக்கப் பட்டு, சென்னை யில் உள்ள புள்ளியியல் மையத்தில் கணக்கு பராமரிக்கப்படுகிறது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், கருவூலங்களிலிருந்து பிடித்தம் தொடர்பாக முறையான தகவல்கள் செல்லாததால் புள்ளியியல் மையத்தில் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு கள் பராமரிக்கப்படவில்லை. இதனால் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களு க்கு சேமநல நிதியில் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவரம் 2006-07க்கு பிறகு கொடுக்கப்படவில்லை.

அதேபோல் பங்களிப்பு திட்டத்திலும் பிடித்தம் செய்யப்பட்ட கணக்கு விவ ரம் இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட த்தில் சேர்ந்த தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 36 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர் களது பிடித்தம் தொடர்பான விவரம் இல்லாததால் இதுவரை எந்தவித பணப்பலனும் வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு தொகை குறித்த விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டு வருகின்றனர். ஆனால் இது வரை எந்தவித பதிலும் தெடக்கக்கல்வித்துறையால் அளிக்க முடியவில்லை.